கெமிஸ்ட்ரி….கெமிஸ்ட்ரி… அப்படிங்கிற வார்த்தை காதலர்களுக்கிடையே பேசப்படும் பொக்கிஷ வார்த்தை.
இந்த கெமிஸ்ட்ரி மட்டும் அவர்களுக்குள் இருந்துவிட்டால், இவர்களை படைத்த அந்த பிரம்மதேவன் வந்தால் கூட, காதலர்களை பிரிக்க முடியாது.
ஆனால், கெமிஸ்ட்ரியில் கலைகட்டி கல்லா நிரப்பும் சிம்புவுக்கும், நயனும் அப்படி ஏன் தான் பிரிஞ்சாங்களோ அப்படிங்கிற கேள்வி மக்களுக்கு மட்டுமல்ல இந்த கெமிஸ்ட்ரி அப்படிங்கிற வார்த்தையும் மக்களோடு சேர்ந்து மண்டையை குழப்பிக்கொண்டுதான் இருக்கிறது.
சினிமாவில், பணம் வாங்கிகொண்டு காதல் தொடர்பான காட்சிகளை நடிக்கசொன்னால், இவர்கள் இருவரும் வாழ்ந்தே காட்டிவிடுவார்கள். அந்த அளவுக்கு சினிமா மட்டுமில்லை நிஜ வாழ்கையிலும் இவர்களுக்கிடையோன உறவில் அன்யோன்யம் இருக்கும்.
ஆரம்பத்தில் காதலர்களாக இருந்த இவர்கள் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் கூட, அந்த கெமிஸ்ட்ரி மட்டும் ஏன் குறையவில்லை?
அதற்கு காரணம், கெமிஸ்ட்ரி என்பது ஒவ்வொரு மனிதர்களின் உணர்வுகளை உள்ளடக்கிய ஒன்று. சிலர் அதனை மூடிமறைத்து சாதரணமாக வாழ்ந்துவிடுவார்கள். பலர் அதனை காட்டாறு அருவி போன்று திறந்துவிட்டுவிடுவார்கள்.
ஆனால், நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவற்கும் ஒரு வரையறை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அந்த உணர்வுகள் ஓவர்புலோ ஆகிவிட்டால், கெமிஸ்ட்ரி பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி காதலர்களுக்கிடையே விஷத்தன்மையை கலந்துவிடும்.
இந்த விடயத்தில், சிம்பும் நயனும் காட்டாறு அருவி போன்று பாய்ந்தாலும், அடக்கி வாசிப்பவர்கள் தான். என்ன அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் சின்ன சின்ன சண்டைகளால் அவர்கள் பிரிந்துவிட்டாலும், இந்த கெமிஸ்ட்ரி என்று வரும்போது மட்டும், இருவரும் நச்சென்று நங்கூரம் போட்டு மக்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர்.
அதனால் தான் எத்தனை ஜோடிகள் திரையில் தோன்றினாலும், இந்த ஜோடியினரின் காதல் காட்சிகளை ரசிப்பதற்கு என்றே ஒரு காதலர் கூட்டம் அலைமோதும்.