‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில் படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது; ஹவருகிற செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு சிம்பு – வெங்கட்பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்று தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜான்வி கபூரின் பெயர்கள் அடிபட்டி வரும் நிலையில், படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை.
விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.