பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றிய ஆசியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 30.09.2016 வெள்ளிக்கிழமை அதாவது இன்றைய தினம் அட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
அட்டன் கல்வி வலயப் பணிமனையும், வேல்ட்விசன் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வு வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்.ராமேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் ரணசிங்க உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பாக சேவையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள், வலயகல்வி அதிகாரிகள் என 50 பேருக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
படங்களும் தகவலும்:- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்