31.10.2016 அன்று இறைபதமடைந்த அன்ரனி ஜெயநாதன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு முல்லை நகரில் இடம்பெற்றது. முல்லை மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுல ராசா, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், திரு.சரவணபவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.



