ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீதியின் ஓரத்தில் இன்று காலை 7 மணியளவில் சுமார் இரண்டடி நீளமான சிறுத்தையின் சடலம் ஒன்று பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுத்தை வாகனம் ஒன்றில் மோதியமையினால் உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொலை செய்தார்களா என்பது தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சிறுத்தையின் சடலத்தை நுவரெலியா வனஜீவராசிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.