சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்

214
திருகோணமலை -ஆலங்கேணி பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கிண்ணியா ஆலங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் ஈஸன் (28) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆலங்கேணி பிரதேசத்தில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், மூன்று வருடங்களின் பின்பு தமது ஊருக்கு திரும்பிய வேளை கிண்ணியா பொலிஸாரால் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

SHARE