சிலாபம்  பாடசாலை மாணவியை கடத்த முயற்சி! கிராம மக்கள் செய்த காரியம்?..!

130

சிலாபம் இரணவில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்த நபர் ஒருவரை கிராம மக்கள் ஒன்றாக இணைந்து மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :- குறித்த மாணவியின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாய் வெளிநாட்டில் வேலை வெய்து வருகின்றார்.

இந்நிலையில் 11 வயதான குறித்த சிறுமி தனது பாட்டியின் பொறுப்பில் வாழ்ந்து வருவதாகவும் அம்பகந்தவில பிரதேச பாடசாலையில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார்.

நேற்று (27) மாலை பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கடத்த முயற்சித்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி கூச்சலிட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பாட்டியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பாட்டி அயலவர்களின் உதவியுடன் குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளார். இந்த நபர் யார் என இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE