சில்லறைகளுக்கு நாம் அஞ்சப் போவதில்லை!- துரோகக் கும்பல் இருக்கத் தான் செய்யும் என்கிறார் மாவை

351

 

ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டிக்கட்டமைப்பின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும். இதைத் தான் சொன்னோமே தவிர நாட்டைப் பிளவுபடுத்துமாறு யார் கேட்டது? நாட்டைப் பிரிக்குமாறு நாம் ஒருபோதும் கேட்கவில்லை.

1429355920-8308 (1)

என்கிறார் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமனற் உறுப்பினரும் யாழ்.மாவட்ட த.தே.கூ.முதன்மைவேட்பாளருமான மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக நீண்டகாலம் தமிழர் அரசியலில் பரிணமித்துவரும் பழுத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவிடம் கண்ட செவ்வி.

கேள்வி: சமஸ்டி தொடர்பில் தென்னிலங்கை கட்சிகள் கொக்கரிக்கின்றன. முதலில் அது பற்றி கூறுங்கள்?

நாம் எமது மக்களுக்கான அரசியல்தீர்வை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளோம். அதனை தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் வழமை போல அரசியலுக்காக தூக்கிப் பிடித்துக் கத்துகின்றன. அதற்காக எமது அபிலாசைகளை உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

கேள்வி: சமஸ்டி என்றால் நாட்டைத் துண்டாடுவதாகக் கூறுகின்றார்களே?

அதற்கு நாம் உன்றும் செய்யமுடியாது. சமஸ்டி என்றால் என்ன என்பதை அவர்கள் உணர வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்த வட-கிழக்கில் சமஸ்டிக் கட்டமைப்பிலான அதிகாரப் பகிர்வையே நாம் தீர்வாகக் கோரினோம். இது நாட்டைப் பிளவுபடுத்துவதாகாது.

கேள்வி: தமிழருக்கான அரசியல்தீர்வு என்பதை நீங்கள் முன்வைத்துள்ளீர்கள். அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன?

நாட்டிலுள்ள பிரச்சினையே இதுதான். பிரதானகட்சிகளான ஜ.தே.கவும் சு.கட்சியும் இந்நாட்டில்வாழும் தமிழ்மக்களுக்கான தீர்வு என்ன என்பதனை இதுவரை முன்வைக்கவில்லை.யார் ஆட்சிக்குவந்தாலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்காமல் இழுத்தடித்துக்கொண்டுவருவதுதான் வரலாறு.

கேள்வி: இந்நிலையில் நாட்டின் ஜக்கியம் உருவாகும் என்று நம்புகிறீர்களா?

தமிழர்பிரச்சினைகள் குறிப்பாக நில ஆக்கிரமிப்புகள் அரசியல்கைதிகள்விடுதலை காணாமல்போNhர் விவகாரம் தொடர்பாக கடந்த சமகால அரசுகள் முன்னிலையில் முன்வைத்தேவருகின்றோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து மௌனம் சாதித்தேவருகின்றனர். இந்நிலையில் நிரந்தரமான இனஜக்கியம் நிரந்தர சமாதானம் எவ்வாறு நிலவும் என்று எதிர்பார்ப்பது.

கேள்வி: தங்கள் தீர்வை அரசு புறக்கணித்தால் அடுத்தகட்டநடவடிக்கை என்ன?

தேசிய இனப்பிரச்சினை தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டுவருவதனை சர்வதேசமே அறியும். இந்நிலையில் இம்முறையும் அது தொடர்ந்தால் அது சர்வதேச அழுத்தங்களுக்கு வித்திடுவதாகவே அமையும்.

கேள்வி: தமிழர்அரசியலில் இளைஞர்பேரவை முதல் தலைவராக வரை பழுத்தஅரசியல்ஞானம் கொண்ட நீங்கள் இனப்பிரச்சினைதீர்வு விடயத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பண்டாரநாயக்க முதல் மஹிந்த வரை ஆட்சிசெலுத்திய காலங்களில் நாம் பல யோசனைகளைமுன்வைத்தோம். சமஸ்டிக்கட்டமைப்பின்கீழ் உள்ளக சுயநிர்ணயஉரிமை தத்துவக்கோட்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணும்வகையில் திம்பு மற்றும் ஒஸ்லோ மாநாடுகள் இடம்பெற்றன. இதறை;குப் பலரும் இணக்கம் தெரிவித்திருந்தும் இன்றைய சூழலில் அதனை எதிர்ப்பதற்கு தேர்தலே காரணமெனலாம்.

கேள்வி: இன்றைய நிலையில் மக்களிடம் நீங்கள்முன்வைக்கும் கோரிக்கை என்ன?

தமிழரின்கொள்கைகள் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு இந்த தேர்தல்மூலம் வடக்கு கிழக்கு மக்கள் பாடம் படிப்பிக்கவேண்டும். வடக்குகிழக்கில் த.தே.கூட்டமைப்பு நிறுத்தியுள்ள வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யவேண்டும். அதனூடாக தமிழினம் யாருக்கும் அடிபணியாது என்ற செய்தியை சர்வதேசத்திற்கு மீண்டுமொருமுறை உரக்கச் சொல்லவேண்டும்.

கேள்வி: தமிழ்மக்கள் ஏனைய மக்களோடு ஒப்பிடுகையில் வாக்களிக்கும்வீதத்தில் ஒரு மந்தநிலையை காண்பித்துவருவது தெரிந்ததே. அது பற்றி..

ஆட்சியின்பாலுள்ள வெறுப்புத்தன்மை. தொடர்ச்சியாக எமது யோசனைகள் அலட்சியம் செய்யப்பட்டுவந்தமை இப்படிப்பல. ஆனால் இம்முறை தமிழ்மக்கள் வழமைபோல ஏனோதானோ என்று செயற்படமுடியாது.அது எதிரணிக்கு வாய்ப்பாகப்போய்விடும். பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவீசி பரப்புரையிலீடுபட்டுவரும் பேரினவாதக்கட்சிகளுக்கும் தமிழினத்துரோகக்கட்சிகளுக்கும் முகத்தில் கரிபூசுவதுபோன்று அவர்களை ஓரம்கட்டும்வகையில் தமிழ்மக்கள் வாக்களிக்கவேண்டும்.

கேள்வி: இம்முறை தங்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது?

எமது தலைவர் சம்பந்தன் ஜயா கூறுவதுபோன்று 20ஆசனங்களை எதிர்பார்க்கின்றோம்.அதனூடாக பலம்பொருந்திய பேரம் பேசும் சக்தியைப்பெற்று சர்வதேசத்திடம் எமது கோரிக்கைகளை விரைவுபடுத்துமாறு கோரலாம். 20ஆசனங்களைப்பெறுவதற்காக நாமனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். எமது வேட்பாளருக்கு கிடைக்கும் தோல்வி மக்களுக்குகிடைக்கும் தோல்வியாக கருதப்படும்.

கேள்வி: அடுத்தமாதம் வெளியாகவிருக்கும் ஜ.நா.வின் மனிதஉரிமைப்பேரவையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பாக தங்கள் எதிர்பார்ப்பு என்ன?

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை நீதியுள்ளதாக தமிழ்மக்கள் பட்டவலிகளுக்கு பரிகாரம் வழங்குவதுபோன்று அமையுமென்று நம்புகின்றேன். அது இன்றைய அரசியல்சூழலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தலாமெனக்கருதுகின்றேன்.தேர்தலின்பின்னர் நிரந்தரத் தீர்வுக்கும் இது வழிவகுக்கலாம். அதனை ஜக்கியநாடுகள்சபை முழுமையாக அமுல்படுத்தவேண்டும். அதனூடாக வடக்குகிழக்கு மக்களுக்கு விடிவு கிடைக்கும்.

கேள்வி: தங்கள் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட வட-கிழக்கை மு.காவும் ஏற்றுள்ளதாக அதன் செயலாளர்நாயகம் ஹசன்அலி கூறியுள்ளாரே..?

ஆம். அது மகிழ்ச்சிதான் முஸ்லிம் மக்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டள்ளதையே அது பிரதிபலிக்கின்றது. வடக்குகிழக்கு தமிழ்பேசும் மக்கள் இரண்டறக்கலந்து வாழ்கின்ற தாயகம்.இதில் யாரும் பிரிந்தவாழமுடியாது.நாம் எப்போதும் முஸ்லிம் மக்களையும் இணைத்தே யோசனைகளைமுன்வைப்பத வழமை.அதிகாரப்பகிர்வு முன்வைக்கப்பட்டபோதுகூட வடக்குகிழக்கு முஸ்லிம்மக்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஒருதனி நிருவாக அலகு சம்பந்தமான அலகு முன்வைக்கப்பட்டது. முன்னைய சந்திரிகா அரசு அதனை ஏற்றிருந்தது.

கேள்வி: உதிரிக்கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் பலவும் வடகிழக்கில் கூடுதலாக களமிறங்கியுள்ளன. அவைபற்றி..

அவை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எமது தமிழ்மக்கள் என்றும் தமிழ்த் தேசியத்தின்பால் ஊறியவர்கள். எனவே இந்த மக்கள் எம்முடன். வெற்றி எமக்கே.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு நிருபர்)

SHARE