சிவகார்த்திகேயனை கன்னத்தில் அறைந்த தனுஷ்!

126

rmcgf26686

ரெமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுதது சினிமா வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில் மறைமுகமாக சிலரை குறிப்பிட்டு பேசினார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே, பிரபல தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயனை ஒரு படத்தில் நீங்கள் நான் சொல்வது போல் தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும், பிறகு சிவா அப்படத்திலிருந்து விலகியதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முன்வரவே, சிவகார்த்திக்கேயனும் சரி என்று சொல்லி இருக்கிறார்.
படத்தின் அறிவிப்பு வெளியாக சில நாட்களுக்கு முன்னர், எதோ ஒரு காரணத்தால் சிவகார்த்திகேயன் அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இதனால், கோபமடைந்த தனுஷ் சிவகார்த்திகேயனை அழைத்து ஏன் அப்போ நடிக்கிறேன் என்று சம்மதம் சொல்லிவிட்டு இப்போ முடியாது என்று சொல்லறீங்க என்று கேட்டிருகிறார்.

உடனே, சிவகார்த்திகேயன் எதிர்த்து பேசவே கடுப்பான தனுஷ் அவரை கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சில நண்பர்கள் மட்டுமே உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மூலமாக நம்முடைய மீடியா நண்பர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தனுஷ்-ன் முதல் நாள் வசூல் 4 முதல் 5 கோடி வரை பெறவே கடினமாக இருக்கும் போது, சிவாவின் ரெமோ 8 கோடி வசூலித்தது, தனுஷ் மட்டுமின்றி பல நடிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது. ஆனால், இதற்க்கு முன்பே, அனிருத் ரவிசந்தர் தனுஷ் சிவகார்த்திகேயனை கன்னத்தில் அறைந்த விஷயத்தை நடிகர் சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், தான் அது யாரென்று எனக்கு தெரியும் என்று தைரியமான தனது கருத்தை டிவிட்டரின் பதிவு செய்து சிவாவுக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறார் சிம்பு என்கிறது நெருங்கிய சினிமா வட்டாரங்கள். இந்த விஷயத்தை மறைக்கவே, பிரச்னையை மீடியா மூலம் தயாரிப்பாளர்கள் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறாரோ தனுஷ் என்ற சந்தேகமும் எழுகிறது.

SHARE