சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 3வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

120

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், படங்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான “கனா” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரியோ நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது, தான் தயாரிக்கும் அடுத்த படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்க உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்தார்.
SHARE