சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்காக விசேட புகையிரத சேவை

249

சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக் காலம் ஆரம்பித்து மூன்று மாதகாலப்பகுதியில் யாத்திரிகர்களின் வருகை ஐந்து இலட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது.

யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லதண்ணி ஊடாகவும், பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வருகை தருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாத்திரிகர்கள் அதிகமாக வருவதன் காரணமாக விசேட பொலிஸ் பாதுகாப்பு அமுலில் இருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் சமன் யடவர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சிவனொளிபாதமலைக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், கினிகத்தேனை தியகல சந்தியின் ஊடாகவும் வேன் மற்றும் ஏனைய வாகனங்கள் ஹட்டன் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி கொழும்பு தொடக்கம் ஹட்டன் வரை விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகையிரத சேவை கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இரவு 7.30 மணியளவில் புறப்பட்டு, ஹட்டன் புகையிரத நிலையத்தை நள்ளிரவு 01.00 மணியளவில் வந்தடையும்.

இந்த புகையிரத சேவை இந்த மாதம் 19,20,21,26,27 ஆகிய தினங்களில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE