சீகிரிய ஓவியங்களை படம்பிடிப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிலையம் தெரிவித்துள்ளது.
இவை தொடர்பான முடிவுகள் நேற்றைய தினம்(29) சம்பந்தப்பட்டவர்ககோடு இணைந்து எடுக்கப்பட்டதாக மத்திய கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் ஜெனரல் ப்ரிசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஓவியங்களை பாதுகாப்பதற்காகவும் அண்மையில் இந்த பகுதியின் கட்டுமானப் பகுதியின் ஒரு பகுதி உடைந்து விழுந்தள்ளமையால் பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக ஒளியினைப் பயன்படுத்தாமல் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி அளித்திருந்த போதும் மக்கள் இந்த விடயத்தை கவனத்திற் கொள்ளவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புராதான சின்னமான சீகிரிய ஓவியத்தை பாதுகாப்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து அந்த பிரதேசத்தில் பொது மக்கள் புகைப்படம் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.