சீனிகம ஆலயத்தின் உண்டியல் உடைப்பு! கூட்டு எதிர்க்கட்சியினர் மீது சந்தேகம்

199

ஹிக்கடுவை சீனிகம ஆலயத்தின் உண்டியல்களுக்கு பௌத்த விவகார ஆணையாளர் திணைக்களத்தினால் வைக்கப்பட்ட சீல், இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆலயத்தின் நிர்வாக செயலாளரினால் மிட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதோடு அதில் இருந்த பணமும் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த விவகார ஆணையாளர் திணைக்களத்திளால் ஆலயத்தின் அனைத்து உண்டியலுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த விவகார ஆணையாளர் திணைக்கள அதிகாரிகளின் முன்னிலையிலேயே அதனை திறந்து பணம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

உண்டியலின் சீல் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மிட்டியாகொட பொலிஸார் விசேட விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்..

கடந்த வாரம் கூட்டு எதிர்கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் பணமும் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது

senigama 54545d

SHARE