சீ.சீ.ரி.வியால் கண்காணிக்கப்படவுள்ளது உடுவில் மகளிர் கல்லூரி

192

பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடுவில் மகளிர் கல்லூரியில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்படவுள்ளதாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினையின்போது, தேவையற்ற நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்தியதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்ப்பதோடு, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கண்காணிப்புக் கருவிகளை பொருத்தவுள்ளதாக பேராயர் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

uduvil-girls-college-1

SHARE