சுதந்திரக்கட்சி மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானம்

258
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவதற்காக மீளவும் விண்ணபங்கள் கோரப்பட உள்ளன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தது. தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 14,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் ஒரு தொகுதியினர் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சியில் போட்டியிடக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு அரசங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் வாரத்தில் பத்திரிகைகளின் ஊடாகவும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஊடாகவும் மீளவும் விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியினர் தனித்து போட்டியிடத் தீர்மானித்தால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்நோக்கக்கூடிய முன் ஆயத்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாற்று நடவடிக்கையாக மீளவும் விண்ணப்பங்களை கோரவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

slfp1-720x450

SHARE