ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிளவடைந்தால் தோல்வியைத் தவிர்க்க முடியாது என தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளாக பிளவடைந்தால் அது சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பாகவே அமையும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முற்போக்குச் சக்திகள் பிளவடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேர்தல் தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது.
கட்சியின் உறுப்பினர்கள் பிளவடைந்தால் அது கட்சி எதிர்பார்க்கும் நன்மைகளைப் பெற்றுக்கொடுக்காது.
எனவே, இந்த விடயங்களை கருத்திற்கொண்டு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டுமென இதன்போது தெரிவித்துள்ளார்.