
சுன்னாகம் நகரப்பகுதியில் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்நநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்று மதியம் சுன்னாகம் நகரப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் மீதே இ்ந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் இருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு கையிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது