
எம்பிலிபிட்டியில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட போது மரணித்த சுமித் பிரசன்னவின் சடலத்தை தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எம்பிலிபிட்டி புதிய நகர மயானத்தில் பிரசன்னவின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்த மரணம் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் நோக்கில் நீதிமன்றம் சடலத்தை தோண்டி மீளவும் பிரதேப் பரிசோதனை நடாத்த உள்ளது.
விருந்துபசாரமொன்றின் போது பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது சுமித் பிரசன்ன கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.