சட்டவிரோத மதுபான உற்பத்தி கும்பலை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டி மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஜீப் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்பாவல, நிள்ளமுவாத பிரதேசத்தில் சட்ட விரோத மதுபான உற்பத்தி கும்பலை சுற்றிவளைக்க பொலிஸ் அதிகாரிகள் சிலர் ஜீப் வண்டியில் சென்றுள்ளனர்.
இதன்போது மதுபான உற்பத்தி கும்பல் ஜீப் வண்டி மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குலுக்கு தொடர்புடைய ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.