சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக காலி கோட்டைக்கு சென்ற இளம் தம்பதியரின் காரின் மீது தாக்குதல்.

164

 

கொழும்பில் இருந்து சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக காலி கோட்டைக்கு சென்ற இளம் தம்பதியரின் காரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காருககு ஏற்பட்ட சேதம் 3 லட்சத்து 96 ஆயிரம் ரூபா என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தம்பதி பயணித்த அதி சொகுசு காரின் முன்னால் பக்க கண்ணாடிக்கு நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இந்த காரில் பயணித்தவர்கள் தனது மகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும், தாக்குதல் மேற்கொண்ட நபர் போலி முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய குறித்த சந்தேக நபரை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி, ரிச்மண்டகந்த பிரதேசத்தை சேர்ந்த நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து இளம் தம்பதி ஒன்று தங்களுக்கு சொந்தமான BMW காரில் காலிக்கு சென்றுள்ளனர். காலை உணவு பெற்றுக்கொள்வதற்காக வீதி ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு உணவகம் ஒன்றுக்குள் சென்றுள்ளனர். அவ்வாறு அவர்கள் செல்லும் போது, திடீரென சந்தேக நபர், காரின் கண்ணாடியை தனது ஹெல்மட்டினால் தாக்கி உடைத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட நட்டம் 3 லட்சத்து 90 ஆயிரம் என கூறி காரின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய சந்தேக நபரை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE