காதலில் தோல்வி அடையும் கதாநாயகன் காதலிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்று சினிமாவில் காட்சிகள் உள்ளன.
சுவாதி மரணத்துக்கு பிறகாவது இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும் என்று ஒருவர் கருத்து பதிவு செய்துள்ளார்.
இதனை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, சுவாதியின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
இதுபோன்ற செயல்களில் சினிமாவின் தாக்கமும் இருக்கிறது. சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்படுகிறது. அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று மகளுக்கு மட்டுமன்றி மகனுக்கும் சொல்லித்தர வேண்டும் என கூறியுள்ளார்.