சுவிஸிலுள்ள தமிழருக்கு ஆப்படிக்க தயாரான இலங்கைக்கு நெத்தியடி

232

 

கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்று சுவிட்சர்லாந்தில் அரசியல் புகழிடம் பெற்றுள்ள 147 இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

swiss-1

இந்த இலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்து செல்வதற்கு வீசா அனுமதியை இலங்கையிலுள்ள சுவிஸ் அதிகாரிகள் பெற்றுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு அரசியல் புகழிடம் பெற்றுள்ளவர்களுள் முன்னாள் புலி செயற்பாட்டாளர் ஒருவரும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் கொழும்பிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவும் இணைந்து இவர்களுக்கு அரசியல் புகழிடம் கேட்டு சிபார்சு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE