செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தின் மஹிந்த ஆய்வுகூடம் வடமாகாணசபை முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் வஃசெட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் மஹிந்த ஆய்வுகூடம் சம்பிரதாய முறைப்படி வடமாகணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது வடமாகணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் உற்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. மஹிந்த ஆய்வுகூடத்தில் பார்வையிட்ட சி.வி.விக்கினேஸ்வரன் பதிவேட்டிலும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
இந் நிகழ்வு இவ்வாறு இருக்க அடிப்படையிலேயே சிங்கள இனவாதியான மஹிந்த ராஜபக்ஷ தனது பெயரைப் பொறிக்கப்பட்டே இந்த ஆய்வுகூடத்தைக் கட்டிக்கொடுத்துள்ளார். இது பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கிடையே ஒரு வரலாறாக பதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆகவே இதனை ஆய்வு மையம் என்று பெயரிடுவது சிறந்ததொன்றாகும் என்பது மக்களின் கருத்து.
இவ்வைபவத்தில் உரை ஆற்றிய பா.உ .சிவசக்திஆனந்தன்
செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தின் மஹிந்த ஆய்வுகூடம் வடமாகாணசபை முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
Posted by Thinappuyalnews on Thursday, June 11, 2015
அந்த இனப்படுகொலையாளி மஹிந்தைவின் பெயரை யாரும் உச்சரிக்காது போவார்கள். இன்னும் பல மஹிந்த ஆய்வுகூடங்கள் வடமாகணசபை கல்வி அமைச்சினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை கவனத்தில்க் கொண்டு செயற்பாடவேண்டும் வடமாகாணசபை முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சர் குருகுலராசா அவர்கட்கும் இது சவாலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இங்கு நடைபெற்ற நிகழ்வுகளின் படங்களும், கானொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தின் மஹிந்த ஆய்வுகூடம் வடமாகாணசபை முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.https://www.thinappuyalnews.com/?p=28569
Posted by Thinappuyalnews on Thursday, June 11, 2015