செந்தில் தொண்டமானுக்கு பிடியாணை

283
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் வழிமறித்து இடையூறு விளைவித்தமை தொடர்பாக செந்தில் தொண்டமானுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று  இடம்பெற்றபோது அமைச்சர் செந்தில் தொண்டமான் சுகயீனம் காரணமாக நீதிமன்றில் சமூகமளிக்கவில்லை என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.ராம்மூர்த்தி தெரிவித்ததோடு, அதற்கான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

எனினும் அந்த மருத்துவ அறிக்கையை நிராகரித்த ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, இந்த வழக்கு விசாரணைகளின் போது செந்தில் தொண்டமான் முன்னிலையாக தவறியதால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு பிடியாணையை பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதிவரை இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் செந்தில் தொண்டமான் உட்பட ஊவா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராம், எஸ்.சக்திவேல், எம்.ரமேஸ், எம்.உதயகுமார் ஆகியோரும் இந்த முறைப்பாட்டில் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

senthil-thondamaan

SHARE