மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் நிதி மற்றும் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகிறார்கள்.
மன மெட்ராஸ் கொசம் (நம்ம சென்னைக்காக) என்ற அமைப்பின் மூலம் இது நடந்து வருகிறது.
இந்த அமைப்புடன் இணைந்து நிவாரண பொருட்களை சேகரிக்கும் சமந்தா, ‘ஆந்திரா, தெலுங்கானா மக்களே உங்களால் எவ்வளவு உதவி வழங்க முடியுமோ அந்த அளவு நம்ம சென்னைக்காக உதவுங்கள்.
இதை உங்களிடம் மனதார கேட்டுக்கொள்கிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.