சென்னையில் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான தனி இடம் வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

292

 

சென்னையில் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான தனி இடம் வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் “பாலியல் மற்றும் சட்டம்” என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் பாலியல் தொழில்புரியும் பெண்களுக்காக பணியாற்றி வரும் 16 சமூக சார்ந்த அமைப்புகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

இந்த கருத்தரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறைகளில் இருந்து காக்கும் சட்ட திருத்தம், பணியிடங்களில் சந்திக்கின்ற பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம், குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டம், ஆள்கடத்தல் தடை சட்டம் போன்ற முக்கிய சட்டத்திருத்தங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பயன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், அகில இந்திய பாலியல் தொழில் செய்யும் பெண்கள் சங்கத்தின் செயலாளர் குசும் மற்றும் பிரசார செயலாளர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த சில சம்பவங்களையும், சட்டம் குறித்த விழிப்புணர்வு இருந்த காரணத்தினால் அந்த சூழ்நிலைகளை எவ்வாறு சட்டத்தின் உதவியுடன் எதிர்கொண்டார்கள் என்பது குறித்தும் பேசினார்கள்.

SHARE