செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் தந்தையாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது – றிஷாத் பதியுதீன்

285

டெலோ இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் தந்தையார் அமிர்தநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் நல்லுறவை வளர்ப்பதில் அவர் பெரும் பங்காற்றியவர்.

மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகக் கொண்ட அமிர்தநாதன் அடைக்கலநாதன் பெயர் பெற்ற சித்தவைத்தியராக பணிபுரிந்தவர்.

மாவட்டத்தின் இன ஒற்றுமைக்காக காலம் சென்ற அமிர்தநாதன் பாடுபட்டு வந்திருக்கின்றார்.

தான் பிறந்து வாழ்ந்த விடத்தல்த்தீவுக் கிராமத்தில் சகோதர முஸ்லிம்களுடனும், இந்துக்களுடனும் மிகவும் அன்பாகவும், நேயமாகவும் பழகியவர்.

அவர்களது இன்ப துன்பங்களில் எப்போதும் பங்கேற்கக் கூடியவராக இருந்தவர் என அறிவித்துள்ளார்.

 

யுத்த சூழ்நிலைகளால் விடத்தல்த்தீவு மக்கள் ஒட்டுமொத்தமாக ஊரைவிட்டு வெளியேறிய போது காலம் சென்ற அமிர்தநாதனும் குடும்பத்தாருடன் இடம் பெயர்ந்து வவுனியாவிலும் பின்னர் கொழும்பிலும் வாழ்ந்தார்.

அதன் பின் மீண்டும் மன்னார் தோட்டவெளியில் விடத்தல்தீவு மக்களுடன் இணைந்து வாழ்ந்தார்.

வயதான காலத்திலும் அவர் தனது வைத்திய தொழிலை கைவிடாது நோய்களை குணப்படுத்தி வந்தமை சிறப்பானது.

மேலும், அன்னாரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன் என கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-19 625-0-560-320-160-600-053-800-668-160-90-20 625-0-560-320-160-600-053-800-668-160-90-21

SHARE