செவ்வாய் கிரகத்தில் உருளைக் கிழங்கு

376
இன்று பெரும்பாலான விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஒரே பார்வையாக இருப்பது செவ்வாய் கிரகமாகும்.அங்கு நீர் இருக்கின்றதா? மனிதர்களை குடியேற்ற முடியுமா? என்றெல்லாம் பெரும் செலவு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில் செவ்வாய் கிரகத்தில் விளைவிக்கக்கூடிய உருளைக் கிழங்கு வகையினை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச உருளைக் கிழங்கு சம்மேளனம் (International Potato Centre – CIP) மற்றும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் என்பன இணைந்து களமிறங்கியுள்ளன.

இம் முயற்சியானது செவ்வாய் கிரகத்தில் உணவு வகைகளை உற்பத்தி செய்ய முடியுமா என்றும், மனிதர்கள் வாழத்தக்க தகுதிகள் செவ்வாய் கிரகத்தில் இருக்கின்றனவா? என்பவற்றிற்கான விடையைக் காண்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE