இயக்குனர் பாலா படங்கள் என்றாலே எப்போதும் ஒரு தனித்துவம் இருக்கும், அவருடைய படங்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது.
இந்நிலையில் இவரின் முதல் படமான சேதுவில் முதலில் முரளி தான் நடிக்க வேண்டியதாம், ஆனால், படத்தில் மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அப்படத்திலிருந்து விலகினாராம்.
இருந்தாலும் இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களிடம் பாலாவை சிபாரிசு செய்தது முரளி தானாம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலா தெரிவித்துள்ளார்.
பரதேசி படத்தில் அதர்வா நடிக்க வைத்தது ஒரு நன்றிக்கடன் தான் என பாலா கூறியது, ஏன் என்பது தற்போது தெரிகின்றதா!.