சேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கொண்டயா விடுதலை.

303

சேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சேயா கொலையை மேற்கொண்டதாக முன்னதாக கொண்டயா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர் அவரது சகோதரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கொண்டயாவின் மரபணு சேயாவின் சடலத்தில் காணப்பட்ட மரபணுவுடன் பொருந்தவில்லை.

எனினும் அவரது சகோதரரது மரபணு பொருந்தியதாக நீதிமன்றில் பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் கொண்டயா இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரரை எதிர்வரும் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE