சொக்லேட் என்ற பெயரில் தருவிக்கப்பட்ட போதைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட மெஜிக் மஷ்ரூம்(Magic Masroom) எனப்படும் அபாயகர ஔடத வகையொன்று வலான மோசடி தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் நாரஹேன்பிட்ட வீடொன்றிலிருந்து இவை கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சொக்லேட் போன்று அழகான மிளிரக் கூடிய கடதாசிகளில் பொதி செய்யப்பட்டு இவை சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவரின் ஒத்துழைப்புடன் இவற்றை கொள்வனவு செய்ய செல்வது போன்று பாசாங்கு செய்து இந்தப் போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த வீட்டிலிருந்த 21 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மெஜிக் மஷ்ரூம் எனப்படும் அபாயகர ஔடத பக்கெட்டுகள் 27 மற்றும் புரோபலீஸ் எனப்படும் அபாயகர ஔடதம் அடங்கிய சிறிய போத்தல்கள் 42 மற்றும் கெனபீஸ் எனப்படும் கஞ்சா செடியினால் பெறப்படும் 16 ஹெஷ் குரூம் எனப்படும் பொருள் என்பன மீட்க்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பபட்ட பெண்ணிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த போதை மருந்துகள் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வரும் வெளிநாட்டு பெண் ஒருவரிடம் இருந்தே இவை கிடைப்பதாகவும் இவை சொக்லேட் போன்று தருவிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த அபாயகர ஔடதம் குறித்து நன்கு தெரிந்தவர்கள் மத்தியில் இவை விற்கப்படுவதாகவும் இவற்றின் மொத்தப் பெறுமதி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக நரஹேன்பிட்ட பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .