சோக மயமான லண்டன்! கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி பயணத்தில் பல்லாயிரம் மக்கள்…

240

பிரித்தானியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது.

காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN என்னும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் பல்லாயிரம் மக்களின் கண்ணீர்கள் மத்தியில் இடம் பெறுகின்றன.

கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த அனர்த்தத்தில் கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

மக்கள் அதிகமாகக்கூடும் பிரித்தானிய கடற்கரைகளில் உயிர்காப்பு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்த வாதப்பிரதிவாதங்களையும் இந்தச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
uk-st01

uk-st02uk-funeral

uk-funeral01

uk-funeral03

uk-funeral04

uk-funeral05

uk-funeral06

SHARE