ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன் திகதி அறிவிக்கப்படும்

127
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி, 2023 ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும். முன்னதாக, டிசம்பர் இறுதிக்குள் இந்த திகதி அறிவிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தாலும், பல காரணங்களால் குறித்த அறிவிப்பு சில நாட்கள் தாமதமானது என்று இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குப் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி எச்சரித்துள்ளார். – Sooriyan

SHARE