ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடு த்த மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் 71 ஆவது அமர்வு செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் உரையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியூயோர்க் பயணமாகிறார்.
அதேவேளை அடுத்த வருடம் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பதவியிலிருந்து வெளியேறவுள்ள நிலையில் அடுத்த மாதம் இடம்பெறும் ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் இறுதியாகக் கலந்துகொள்வதும் கடந்த பத்து வருடங்களாக ஐ.நா. பொதுச் செயலாளர் பதவி வகித்து வரும் பான் கீ முன் இவ்வருட இறுதியுடன் ஓய்வுபெறவுள்ளதாலும் அடுத்த மாதம் இடம்பெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் விசேடமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.