ஜனாதிபதியின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி விகாரையில்……..

235

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதை

முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை இன்று (02)

பிற்பகல் களனி விகாரையில் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் வரலாற்று பிரசித்திபெற்ற களனி விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் முதலாவதாக மத

அனுட்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஆசீர்வாத பூஜையில் கலந்துகொண்டார்.

களனி ரஜமகா விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித்த தேரரின்

ஆலோசனைக்கு அமைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கம்பஹ மாவட்ட பிரதம சங்கநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுவில விமலகித்தி நாயக்க தேரர், ஸ்ரீபாதஸ்தானாதிபதி

சங்கைக்குரிய பெங்கமுவே தம்மதித்த நாயக்க தேரர், சங்கைக்குரிய கொட்டபொல அமரகித்தி நாயக்க தேரர்

உள்ளிட்ட மகாசங்கத்தினர்கள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள்,

வெளிநாட்டு பிரதிநிதிகள், பெருந்தொகையான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

1989 பெப்ரவரி 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாராளுமன்றத்திற்கு

தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.download

SHARE