ஜனாதிபதியை சந்தித்தார் ஹுசைன்!

258
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் செயிட் அல்ஹூசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பல்வேறு விடையங்கள் பேசப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கொழும்பில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்த ஹூசைன் வடக்கில் தாமதிக்கப்படும் மீள்குடியேற்றம், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல்வேறு விடையங்கள் தொடர்பாக கேட்டிறிந்து கொண்டார் என கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியை சந்தித்த அவர், இது தொடர்பாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருப்பார் என நம்பப்படுகின்றது.

SHARE