ஜனாதிபதி தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம்-நாமல் ராஜபக்ஷ.

553

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளரை தெரிவுசெய்வது எமக்கு பெரிய விடயமல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர் தொடர்பாகவுமே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விடயத்தில் நாங்கள் அலட்டிக்கொள்ளமாட்டோம். ஏனெனில் எமது எதிர்பார்ப்பாக இருப்பது மாகாணசபை தேர்தலாகும். அதற்கான முயற்சியிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

SHARE