ஜனாதிபதி முறைமை இரத்து செய்ய வேண்டும்: கரு ஜயசூரிய வலியுறுத்து

132

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான கோரிக்கையை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இதனை மேற்கொள்வதாக உறுதியளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தேசிய பிரச்சினை
கடந்த கால தலைவர்களும் அரசாங்கங்களும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை அரசியல் காரணங்களுக்காக முறியடித்தன.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்க இடையில் நம்பிக்கை இல்லாத வரை இலங்கை ஒரு நாடாக முன்னேற முடியாது.

இதன்படி தேசிய பிரச்சினைக்கு அரசியல் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. ஏனெனில் பல்வேறு எதிர்ப்புத் தாக்கங்கள் காணப்படும்.

மேலும், முன்னதாக 2000 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சித்தார்.

இனவாதக் கண்ணோட்டம்
இது ஒரு மதிப்புமிக்க முன்மொழிவாக இருந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் அதை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.

உண்மையில், அந்த காலப்பகுதியில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியே குமாரதுங்கவின் நடவடிக்கையை எதிர்த்தது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைவின் நகலை எரித்த செயற்பாட்டிலும் ஈடுபட்டது.

இந்தநிலையில் நல்லாட்சி அரசாங்க நாட்களில், புதிய அரசியலமைப்பை நிறுவுவதற்கும் அதன் படி செயற்படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதுவும் குறுகிய அரசியல் மற்றும் இனவாதக் கண்ணோட்டங்களால் தோல்வியடைந்தது.” என்றார்.

SHARE