ஜனா –இரா துரைரத்தினம் போன்றோரை அரசியலில் இருந்து ஒதுக்குங்கள். இல்லையேல் இவர்களை நாம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவோம்

328

 

கி.துரைராஜசிங்கம், செயலாளர், இலங்கைத் தமிழரசுக் கட்சி அவர்களுக்கு. 23 06.2015

இராசமாணிக்கம் ஜயாவுக்குப் பின் தமிழரசுக் கட்சியின் உயர் பதவிக்குத் தெரிவான மட்டு மகன் என்ற பெருமையினைப் பெற்ற தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

11649268_10203440310563166_586569131_o

அண்மையில் இணையத்தளம் ஒன்றின் மூலமாக “ வேதம் ஓதும் சாத்தான்கள் “ என்னும் கட்டுரையை வாசித்தேன். புங்குடுதீவுச் சம்பவத்துக்கு முன்னதாக கூட்டாகப் பெண்களைக் கற்பழித்த சம்பவங்கள் தொடர்பாகவும் பெண்கள் மீதான வன்செயல்கள் தாக்குதல்கள் தொடர்பாகவும் விபரமாக அதில் தகவல்கள் இருந்தன. எமது மட்டக்களப்பு வாழ் அரசியல்வாதிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து நாம் வெட்கப்பட வேண்டும்.

குறிப்பாக புங்குடுதீவுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தனியே பெண் வெறி கொண்டவர்கள். ஆனால் எமது மட்டு வாசிகளோ அதனுடன் பதவி வெறியும் கொண்டவர்களாகவன்றோ இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவங்களுக்குத் தலைமை தாங்கியும் சம்பவங்கள் நடந்த போது அக் கட்சிக்குத் தலைமை தாங்கியுமிருந்த இராதுரைரத்தினம் ஜனா போன்றோருக்கு வாக்களித்தமைக்காக எம்மை நாமே நொந்து கொள்கிறோம்.

இவ்வாறானவர்களை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட வைத்தார்கள். இத்தகையவர்களை எதிர்காலத்தில் இக் கட்சியின் சார்பில் போட்டியிட அனுமதிக்க வேண்டாமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் வெலிக்கந்தையில் கூட்டாக ஒரு பெண்ணைக் கற்பழித்துக் கொன்ற பிள்ளையான் குழுவினரை கூட்டமைப்புக்குள் எந்தக் காலத்திலும் இணைத்துக் கொள்ளாதீர்கள்.

ஆரையம்பதியில் மட்டுமே நான்கு பெண்களை ரெலோ சுட்டுக் கொன்றிருக்கிறது. அதில் ஒரு பெண் கர்ப்;பிணி. மாணவியொருத்தியை கற்பழித்த பின்பே கொன்றிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அக் கட்சிக்குத் தலைமை தாங்கியவர் ஜனா என்ற விடயம் முன்னரே தெரிந்திருந்தால் மாகாண சபையில் தெரிவாக்காமல் விட்டிருக்கலாம்.

முஸ்லிம் பெண்களைக் கொன்ற இரா துரைரத்தினம் எமது பிரதிநிதியா ? தயவுசெய்து இவ்வாறு படுமோசமான செயல்களைப் புரிந்தவர்களை எமது தலைவர்களாக எமக்கு அறிமுகப்படுத்தாதீர்கள்.

குறிப்பாக ஜனா –இரா துரைரத்தினம் போன்றோரை அரசியலில் இருந்து ஒதுக்குங்கள். இல்லையேல் இவர்களை நாம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவோம்.

நன்றி

இப்படிக்கு தமிழரசுக் கட்சி விசுவாசி சி. உலகநாதன்

பிரதிகள்: — இரா.சம்பந்தன் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

— மாவை சேனாதிராஜா தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி.

தொடர்புபட்ட செய்தி வேதம் ஓதும் சாத்தான்கள்.

 

SHARE