ஜா – எலயில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் ஆரம்பம்

143

ஜா எல – ரத்தொலுகம பகுதியில் நேற்று (07) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு 9 மணியளவில் ரத்தொழுகம வீடமைப்பு மைதானத்திற்கு அருகில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரொன்றிலிருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

SHARE