ஜிம்பாப்வேயில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்ற கொடூர நோய்!

143

 

ஜிம்பாப்வே நாட்டில் பரவி வரும் தட்டம்மை நோய்க்கு 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜிம்பாப்வேயில் பரவத் தொடங்கிய தட்டம்மை நோய், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

தட்டம்மையால் இதுவரை 2 ஆயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 157 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெரும்பாலான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும் மத நம்பிக்கைகள் காரணமாக பலர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மறுப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்த 6 மாதம் முதல் 15 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய திட்டத்தை ஜிம்பாப்வே அரசு தொடங்கியுள்ளது.

SHARE