ஜீவா காட்டில் அடை மழை, குவியும் ஹீரோயின்கள்

262

யான் படத்திற்கு பிறகு தன் திரைப்பயணத்தில் பெரிய இடைவேளை விட்டார் ஜீவா. தற்போது திருநாள், போக்கிரி ராஜா, கவலை வேண்டாம் என அடுத்தடுத்த படங்களை விரைவில் ரிலிஸ் செய்யவுள்ளார்.

இதில் இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் முன்னணி கதாநாயகிகள் தான் நடித்து வருகின்றனர். திருநாள் படத்தில்நயன்தாரா, போக்கிரி ராஜா படத்தில் ஹன்சிகா, கவலை வேண்டாம் படத்தில் காஜல் நடித்துள்ளனர்.

தற்போது வந்த தகவலின்படி மைக்கல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஜீவா நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாகதமன்னா நடிக்கவுள்ளாராம். தென்னிந்திய சினிமாவின் அனைத்து ஹீரோயின்களுடன் ஒரே நேரத்தில் ஜீவா நடித்து வருகிறார்.

001

SHARE