ஜெனி­வாவில் இலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க 15 உப குழுக் கூட்­டங்கள்

246

 

ஜெனி­வாவில் இலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க 15 உப குழுக் கூட்­டங்கள்

ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை தொடர்­பான உப நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்­டங்­களில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் பர­ப­ரப்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் எழும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள், சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் இலங்கை தொடர்­பான இந்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­துள்­ளன. மேலும் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் பிர­தி­நி­திகள் இலங்கை தூத­ர­கத்தின் பிர­தி­நி­திகள் என பலரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். அத்­துடன் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­களும் இந்த உப குழுக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

பிரான்ஸ் அமைப்பு நடத்தும் கூட்டம்

இலங்கை தொடர்­பான முத­லா­வது உப­குழுக் கூட்­ட­மா­னது பிரான்ஸ் நாட்டின் அமைப்பு ஒன்­றினால் நாளை 13 ஆம் திகதி மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 22 ஆவது அறையில் பிற்­பகல் 2 மணி­யி­லி­ருந்து 3.30 வரை நடை­பெ­ற­வுள்­ளது.

தமிழ் உல­கத்தின் கூட்டம்

இலங்கை தொடர்­பான இரண்­டா­வது உப­குழுக் கூட்டம் 14ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ் உலகம் என்ற சர்­வ­தேச அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இந்த உப­குழுக் கூட்டம் மனித உரிமைப் பேர­வையின் 11ஆவது அறையில் 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

மூன்­றா­வது உப­குழுக் கூட்டம்

எதிர்­வரும் 15ஆம் திகதி மாலை 4.30 க்கு இலங்கை தொடர்­பான மூன்­றா­வது உப­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. பாரதி நிலைய அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த உப­குழுக் கூட்­டத்தில் இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இது ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 23 ஆவது அறையில் நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்­பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தில் 11 ஆவது இலக்க அறையில் மற்­று­மாரு உப குழுக் கூட்டம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. மாலை 4.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்ள இந்த கூட்­டத்தை லீ பொண்ட் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்­ளது.

பிரான்ஸ் அமைப்பு

மற்­றொரு பிரான்ஸ் நாட்டின் தொண்டர் அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் 18 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை நடை­பெ­ற­வுள்ள இந்த உப குழுக் கூட்­டத்தில் பல்­வேறு நிபு­ணர்­களும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.

எதிர்­வரும் 19 ஆம் திகதி மாலை 3 மணிக்கு தமிழ் உலகம் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை மனித உரிமை தொடர்­பான உப குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. நிலை­மாறு கால நீதி என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் 11 ஆவது இலக்க அறையில் நடை­பெ­ற­வுள்­ளது.

மற்­று­மொரு சர்­வ­தேச மனித உரிமை அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் எதிர்­வரும் 19ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. பாரதி கலா­சார நிலையம் ஏற்­பாடு செய்­யது இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் 20 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை மனித உரி­மையின் நிலை­மைகள் என்ற தலைப்பில் இடம்­பெ­ற­வுள்ள இந்­தக கூட்­டத்தில் கூட்டம் 22 ஆவது குழு அறையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

சமூக வலு­வூட்டல் மற்றும் சமூ­கத்­திற்­கான அபி­வி­ருத்தி என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான ஒரு உப­குழுக் கூட்டம் 21ஆம் திகதி ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை 24 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

அனைத்­து­வி­த­மான அநீ­தி­களும் எதி­ரான சர்­வ­தேச இயக்கம் இலங்கை தொடர்­பான 22 ஆம் திகதி ஒரு உப குழுக் கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் மாலை 4 மணிக்கு இக்­கூட்டம் நடை­பெறும்.

சர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்பின் உப­குழுக் கூட்டம்

சர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருக்கும் இலங்கை தொடர்­பான உப­குழுக் கூட்டம் 25ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பிற்­பகல் ஒரு மணிக்கு ஆரம்­ப­மாகும் இந்த உப­குழுக் கூட்­டத்தில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்து விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் வளா­கத்தின் 15 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

அநீ­தி­க­ளுக்கு எதி­ரான அமைப்பு

அத்­துடன் 26 ஆம் திகதி 12 மணிக்கு இலங்கை தொடர்­பான ஒரு உப குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. சக­ல­வி­த­மான அநீ­தி­க­ளுக்கும் எதி­ரான சர்­வ­தேச இயக்கம் ஏற்­பாடு செய்­துள்ள இந்தக் கூட்டம் 27 ஆவது குழு அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. மற்றும் பிரான்ஸ் சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றினால் இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் ஒன்று 26 ஆம் திகதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதுவும் குழு அறை 27 இல் பிற்­பகல் 1.30 இற்கு ஆரம்­ப­மாகும்.

பசுமை தாயகம்

இதே­வேளை இந்­தி­யாவின் பசுமை தாயகம் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப­குழுக் கூட்டம் எதிர்­வரும் 27ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவிருக்கிறது.

இலங்கை மனித உரிமை நிலைமை மற்றும் அநீதி என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக் கூட்டம் இறுதியாக ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு குழு அறை 15 இல் நடைபெறும்.

SHARE