ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இரகசிய கடிதம்: ஜீ.எல். பீரிஸ்

289

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்துவதற்காக மேலை நாடுகள் மற்றும் இந்தியாவிற்கும் அரசாங்கம் இரகசிய கடிதங்கள் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின்  போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமை ஆணையாளரிடம் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் தலைவர்களின் கையெழுத்து இடப்பட்ட கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்திற்கு பின்னர் அமைச்சரின் தலைமையில் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பொன்றை நடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE