ஜேம்ஸ் பெர்ரியை செல்வம் அடைக்கலநாதன் சந்தித்தார்!

250

நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பிரித்தானிய கொன்சவேட்டி கட்சியைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி அவர்களை வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றவளாகத்திலுள்ள போர்ட்கலிஸ் இல்லத்தில் நேற்று (20.12) காலை 10.00 மணியளவில்சந்தித்தார்.

இச் சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானியகிளையின் இணைப்பாளர் சாம் சம்பந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.

முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் பின், அப்போதைய இலங்கை அரசினால் எதிர்கொண்டஅரசியல் நெருக்குவாரத்தில் தளர்ந்து போகாமல் தமிழ்த் தேசியத்தை தனித்துவமாகமுன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் பேராதரவினை வழங்கி வடமாகாண சபைத் தேர்தலில் ஓர் அரசியல் ஆணையைக் கொடுத்தனர்.

ஆனால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெரு வெற்றியை அன்றைய இலங்கை அரசு கண்டுகொள்ளாத நிலையில்,பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்காக கொழும்பு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட்கமரூன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து எமது வட மாகாண சபை முதலமைச்சரையும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் பிரத்தியேகமாக சந்தித்ததன்பின்னரே மாநாட்டில் பங்கேற்றார்.

இதன் மூலம் அன்றைய காலகட்டத்தில் மிகமுக்கியமான அரசியல் செய்தியையும் அழுத்தத்தையும் இலங்கை அரசுக்குகொடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்த செல்வம் அடைக்கலநாதன் அதற்கு கொன்சவேட்டிகட்சிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும்மிகுந்த நன்றியை முதலில் தெரிவித்தார்.

அடுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் கூட்டத் தொடர்களில் இலங்கை அரசபடைகளினால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள்குறித்து தொடர்ந்து எமக்காக –தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரித்தானியவெளியுறவுக் கொள்கைக்கும் அக்கொள்கையின் பின்புலமாக இருக்கும் பிரித்தானியநாடாளுமன்றத்துக்கும் பிரித்தானிய மக்களின் உயர்ந்த மனித உரிமைவிழுமியங்களுக்கும் பொதுவில் ஆழ்ந்த நன்றி பாராட்டினார்.

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டைநகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்பாடொன்று இரண்டு மாதங்களுக்குமுன் ஜேம்ஸ் பெர்ரி அவர்களின் தொகுதியான கிங்ஸ்டனில் நிகழ்ந்தை நினைவுகூர்ந்து அதற்காக ஜேம்ஸ் பெர்ரியிடம் தனிப்படவும் செல்வம் அடைக்கலநாதன் நன்றிதெரிவித்தார்.

மனித உரிமைகள் குறித்த கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு அன்றைய இலங்கை அரசுக்குநிறுத்தப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இன்றைய அரசு மீளப்பெறுகின்றகட்டத்தை நெருங்கி வரும் சூழலையும் இலங்கையின் நீண்ட கால தேசியஇனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வை அரசியலமைப்பு மாற்றத்துக் கூடாக இன்றையஅரசு காண முயன்று வரும் சூழலையும் சமாந்திரமாக வினைத்திறனுடன் கையாளக்கூடியசிறப்பான ஒரு இராஜதந்திர அணுகுமுறையே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியகுறைந்தபட்ச ஓர் அரசியல் தீர்வையேனும் சாத்தியமாக்கக் கூடியதெனத் தெரிவித்தரெலோ தலைவர் செல்வம் அடைகலநாதன், அவ்வகையான பிரித்தானியாவின் அழுத்தங்களைஇலங்கை அரசு ஏற்கனவே உணரத்தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

இறுதித் தீர்வைதமிழ் மக்கள் கிட்டும் வரை அவ்வகையான அழுத்தங்கள் தொடர வேண்டுமெனவும்கேட்டுக்கொண்டார்.

 

SHARE