ஜேர்மனியில் மீண்டும் ஒரு தாக்குதல்! பெண் ஒருவர் பலி

306

ஜேர்மனி ஸ்டட்கார்டு பகுதியில் இடம்பெற்ற வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டட்கார்டு நகரில் உள்ள ரீட்லின்ஜென் பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் யுவதி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உயிரிழந்த அதேவேளை மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர் சிரியாவை சேர்ந்தவர் என கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒடும் ரயிலில் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முனிச் பகுதியில் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்றைய தினம் இந்த வெட்டுக்கத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

 

 

 

SHARE