ஞானசாரதேரர் ஒரு நச்சுச்செடி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்

301
ஞானசார தேரரின் தலைமையில் செயல்பட்ட ஓரு குழுவே தர்கா நகரில் முஸ்லீம்  மக்களின் கொலைகளை செய்து முடித்தது. ராஜபக்ச அரசு விசாரனைகளை கூட நடத்தாது முடக்கியது அல்லது ஆதரவு வழங்கியது. இந்த நல்லாட்சி அரசு மேற்படி கொலைகள் பற்றி விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க முன்வர வேண்டும். பல்வேறு வீடியோ ஆதாரங்கள் கூட அந்த நாட்களில் ஊடகங்களில் வெளிவந்தது.
ஒரு பௌத்த பிக்குவானவர் தர்மத்தை போதிக்க வேண்டியவர், புத்தரின் பஞ்சசீல கொள்கைகளை பரப்ப வேண்டியவர். ஞானசார தேரரோ இனவாதங்களை கக்கி பௌத்த மதத்தை அசிங்கப்படுத்தி வருகிறார். பௌத்த மதத்தின் தர்ம கொள்கைகளை பரப்ப வேண்டியவர் இளம் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து இனவாதம் எனும் நச்சு விதையை விதைத்து வருகிறார். அமைதியாக அரச மரத்தின் கீழ் அன்பின் போதைனைகள் முலம் மக்களிடத்தில் புத்தரின் போதனைகளை கொண்டு செல்ல வேண்டியவர்கள் ரோட்டில் காட்டு தர்பார் செய்கின்றார்கள், பொலிசாரிடம் அடிவேண்டி கட்டுகிறார்கள். தங்களின் காவியுடை கிழிய கிழிய அசிங்கப்படுகிறார்கள். இது ஒரு பௌத்தனுக்கு அழகா என்பதை ஒவ்வொரு பௌத்தனும் சிந்திக்க வேண்டும். சிறந்த நெற்பயிரினுள் ஒரிரு நஞ்சு செடிகளை விட்டால் அது ஒட்டுமொத்த வயலையும் நாசப்படுத்தி விடும்.
வெறுமனே ஞானசார தேரருக்கு எதிராக சிறு குற்றச்சாட்டுக்களின் பேரில் நடவடிக்கை எடுப்பதனை விட அவர் உடந்தையாக இருந்த கொலைகள் பற்றி விசாரிக்க இந்த அரசு முன் வரவேண்டும். பௌத்த இனவாதிகளுக்கு பயந்து கொலைகளை மூடிமறைக்கக்கூடாது. பல்லின மக்கள் வாழும் நாடாக இது மிழிரவேண்டும் எனின் ஒரு சில நஞ்சு பேரினவாதிகளை செய்த கொலைகளுக்காக தூக்கிலிடுவது ஒன்றும் அநியாயமாகாது. அநீதிகளுக்கு துணை போகும் நிலைகள் தொடர்ந்தால் அல்லது பேரினவாதிகளுக்கு அடிபணிந்து இந்த அரசு பயணித்தால் சிறுபான்மையான தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை சிதறடிக்க முயன்றால் அதன் பயனை அனைத்து மக்களும் மீண்டுமொருமுறை அறுவடை செய்யவேண்டிய நிலை தானாகவே உருவாகிவிடும் இதுதான் எமது நாட்டில் இன நல்லினக்கத்தை ஏற்படுத்தி அனைத்து மக்களும் கௌரவமாக வாழ கிடைத்த கடைசி சந்தர்ப்பமாககூட இருக்கலாம். எனவே நல்லாட்சி அரசு தனது கடமையின் பயணத்தை எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தக்கூடாது என தெரிவித்தார்.
0194d9f3-4144-4374-804a-087a54e256b2
SHARE