ஞானசார தேரர் வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு பல ஆண்டுகள் செல்லும்?

242

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும்…

..இவ் வழக்குகளிலிருந்து அவர் விடுதலை பெறுவதற்கு பல ஆண்டுகள் செல்லும் என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்

ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம நீதிமன்றில் 3 வழக்குகளும் கோட்டே நீதிமன்றில் 3 வழக்குகளும் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் 2 வழக்குகளும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஒரு வழக்கும் என ஒன்பது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அளுத்கம சம்பவங்கள் தொடர்பில் மாத்திரம் களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் 44 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹோமாகம நீதிமன்றில் சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் ஏனைய வழக்குகள் தொடர்பில் எதிர்காலத்திலும் விளக்கமறியலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறித்த சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

SHARE