டாக்கா தெருக்களில் ஆறாக ஓடிய ரத்த வெள்ளம். நடந்தது என்ன?

168

வங்க தேசத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் தெருக்களில் வெள்ளமாக ஓடியுள்ளது.

வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் ஈகை பெருநாள் விழாவின் ஒருபகுதியாக குர்பானி வழங்கப்பட்டது. இதன்பொருட்டு ஏராளமான விலங்குகள் வெட்டப்பட்டன.

இந்த நிலையில் அங்கு உரிய வடிகால் அமைப்புகள் எதுவும் இல்லாததால் வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தங்கியுள்ளது.

இதனிடையே மழையும் கொட்டித்தீர்த்ததால் தெருக்களில் ரத்த வெள்ளமாக ஓடியுள்ளது. மட்டுமின்றி இந்த விழாவிற்காக சுமார் 100.000 விலங்குகளை பலியிட்டுள்ளனர்.

மழையால் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அதுமட்டுமின்றி தெருக்களில் தேங்கிய ரத்தமும் இதில் கலந்ததால் டாக்காவின் முக்கிய தெருவீதிகள் ரத்த ஆறு போன்று காட்சி அளித்துள்ளன.

625-0-560-320-500-400-194-800-668-160-90-2 625-0-560-320-500-400-194-800-668-160-90-3 625-0-560-320-500-400-194-800-668-160-90

 

 

SHARE