டிக்கோயா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சம்பளவுயர்வு கோரி 29ம்திகதி அதாவது இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் பொகவந்தலாவ பிரதான பதையில் வனராஜாவிலிருந்து ஊர்வலமாக வந்து வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன் தோட்ட முகாமையாளரிடமும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்